பரணி மனதில் எழும் கேள்வி என்னை ஏன் இந்த கோலத்தில் பிறக்க வைத்தாய், அழகற்ற உருவம் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாக்கியது. "சோபனா" தேவதையான அவள் தான் இவனுக்கு ஆறுதல். அவளின் இரக்ககுணத்தை அவன் தன்னை காதலிப்பாதாக நினைத்து கற்பனையில் மிதக்கிறான்.ஒரு காலக்கட்டத்தில் இந்த விஷயம் அவளுக்கு தெரிய வர, கடுஞ்சொற்களால் அவனை தாக்கி அவனிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறாள். வைராக்கியமாக அவன் வாழ்க்கை உயருகிறது. அழகற்ற அவன் உருவத்தையும் ஒருத்தி ஏற்றுக் கொள்கிறாள். ஒரு காலக்கட்டத்தில் ஷோபானாவை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவள் நிலைமை என்ன,தன்னை வெறுத்தவளுக்கு அவன் காட்டிய பரிவு என்ன என்பதையும்,கதை முடிவில் ஒரு கருத்தையும் இந்த நாவல் விளக்கும். நன்றி!!
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com